யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அகில உலக அகண்ட பஜனை நிகழ்வு தொடர்ச்சியாக 24 மணித்தியாலங்கள் இரவு,பகலாக நடைபெற உள்ளது.

இதற்கமைய சேர்.பொன்.இராமநாதன் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள மேற்படி நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை(12.11.2022) மாலை-5.50 மணியளவில் பிரசாந்திக் கொடியேற்றம் இடம்பெறும்.தொடர்ந்து மாலை-6 மணியளவில் ஓம்காரம், வேத பாராயணம், சாயி காயத்ரீ, அஷ்டோத்திரத்துடன் அகில உலக அகண்ட பஜனை நிகழ்வு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை(13.11.2022)மாலை-6 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெற்று மஹா மங்களாராத்தியுடன் நிறைவு பெறும்.

இதேவேளை, மேற்படி அகில உலக அகண்ட பஜனையானது உலக மக்கள் அனைவரினதும் நன்மை வேண்டியே இடம்பெற உள்ளதுடன் அனைவரையும் பஜனை நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் மேற்படி சத்தியசாயி சேவா நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Von Admin